Published : 23 Dec 2014 10:38 AM
Last Updated : 23 Dec 2014 10:38 AM
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநர் பதவிக்கு 4 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ நிர்வாக இயக்குநராக இருந்த கிருஷ்ணகுமார் கடந்த மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் அந்தப் பதவி காலியாகவே உள்ளது. இம்மாத தொடக்கத்தில் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ தலைமை நிதி அதிகாரி பிரவீண் குமார் குப்தா, எஸ்பிஐ கேபிடல் நிர்வாக இயக்குநர் ரஜனீஷ் குமார், எஸ்பிஐ-யின் மீடியம் கார்ப்பரேட் குழுமத்தின் தலைவர் என்.கே. சாரி, எஸ்பிஐ பாடியாலா வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஏ. ரமேஷ் ரங்கன் ஆகியோரிடம் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளது.
இப்போது எஸ்பிஐ-யில் 3 நிர்வாக இயக்குநர்கள் பிரதீப் குமார், பி. ஸ்ரீராம், வி.ஜி. கண்ணன் ஆகியோர் உள்ளனர். வங்கியின் பல்வேறு தேர்வுக் குழு பல கட்டங்களாக நேர் காணல் நடத்தியுள்ளது. இதில் யார் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்தூர் நிர்வாகவியல் மையத்தின் இயக்குநர் ரிஷிகேஷா டி. கிருஷ்ணன், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி ஒரு குழுவாகவும்,. எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் எஸ். விஸ்வநாதன், மத்திய அரசின் நிதிச் சேவைப் பிரிவின் கூடுதல் செயலர் ஸ்னேகலதா வத்ஸவா ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்படுபவர் வங்கியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. இப்போது தலைவராக உள்ள அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு செப்டம்பரில் நிறைவுபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT