Published : 05 Nov 2014 11:56 AM
Last Updated : 05 Nov 2014 11:56 AM

28,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் கண்டது சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 141.57 புள்ளிகள் உயர்ந்து 28,001.95 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது.

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து 28,001.95 புள்ளிகளாக இருந்தது. நிப்டியும் 39.50 புள்ளிகள் உயர்ந்து 8,363.65 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) முஹர்ரம் பண்டிகையை ஒட்டி பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, சென்செக்ஸ், நிப்டி இரண்டு பங்குச்சந்தை குறியீட்டு எண்களும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.

பங்குச்சந்தை ஏற்றம் குறித்து பங்கு வர்த்தகர்கள் கூறுகையில், "தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி வருவதும், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதும், அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த முயற்சிகளினாலும் பங்குச்சந்தை குறியீட்டு மதிப்பு புதிய உச்சத்தை அடைவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன" என்று தெரிவித்துள்ளனர்.

ஆசிய பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிகேகி, ஹாங் காங்கின் ஹாங் சென் ஆகிய குறியீட்டு எண்களும் ஏறுமுகத்தில் இருந்தன.

பங்குச்சந்தை ஏற்றத்தால், பஜாஜ் ஆட்டோ, பெல், சிப்லா, ஐ.டி.சி, எல் அண்ட் டி, சன் பார்மா, டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x