Published : 22 Nov 2014 11:46 AM
Last Updated : 22 Nov 2014 11:46 AM
தமிழக அரசு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 1,500 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகளில் முதிர்வடையும் வகையிலான இந்த பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் த. உதயசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏலம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தில் நவம்பர் 25-ம் தேதி நடைபெறும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12 மணிக்குள்ளாகவும், போட்டி யற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solutions {E-Kuber} System) மின்னணு படிவத்தில் (Electronic-format) நவம்பர் 25-ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT