Published : 05 Jul 2019 02:45 PM
Last Updated : 05 Jul 2019 02:45 PM

மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி: பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டன.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக காலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40,022 புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 11,978 புள்ளிகளை தொட்டது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியபிறகு பங்குச்சந்தைகள் சரிவடையத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்து  39,588 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 90 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 11,858 புள்ளிகளாக சரிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x