Published : 25 Aug 2017 12:44 PM
Last Updated : 25 Aug 2017 12:44 PM

ஓராண்டில் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயம்: இபிஎப்ஓ முடிவு

அனைத்து சேவைகளையும் மின்னணுமயமாக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) முடிவு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் காகித பயன்பாடு இல்லாத சேவைகள் என்கிற இலக்கை வைத்துள்ளது. 5 கோடி ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கான அனைத்து சேவைகளையும் மின்னணுமயமாக்க உள்ளது. வருங்கால வைப்பு நிதியிலிருந்து சேமிப்பு தொகையை திரும்ப எடுப்பதற்கான சேவைகளை ஏற்கெனவே மின்னணு மயமாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த நடவடிக்கை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய விழிப் புணர்வை உருவாக்கும். ஆன் லைன் மூலமான இந்த வசதி, தொழிலாளர் வைப்பு நிதி ஆணையத்துக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

இது தொடர்பாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி பி ஜாய் கூறியதாவது: அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்குள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அனைத்து சேவைகளையும் மின்னணுமயமாக்க இலக்கு வைத்துள்ளோம். இதன் மூலம், மொபைல்போன், இண்டெர்நெட் வழியாக காகிதமில்லா சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இபிஎப்ஓ ஆணையம் காகித பயன்பாடு இல்லா சேவைக்கு மாறிய பிறகு பொதுமக்கள் பிஎப் அலுவலகங்களுக்கு நேரில் வரத் தேவையில்லை. இருக்கும் இடத்திலிருந்தே வேலைகளை முடித்துக் கொள்ளலாம்.இதற்கு நேரம் செலவிட தேவையில்லை என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x