Published : 16 Aug 2017 09:57 AM
Last Updated : 16 Aug 2017 09:57 AM
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் சரக்குகளை எடு த்துச் செல்வதற்கு மின்னணு பில் (இ-வே பில்) அவசியமாகிறது. இத்தகைய இ-வே பில் தேவையில்லை என 153 பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருள்களு க்கு இ-வே பில் அவசியமாகும்.
எனினும் உயிருள்ள கால்நடை, கோழி, மீன், பழங்கள், காய்கறிகள், பால், தேன், விதைகள் மற்றும் மாவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் வெற்றிலை, போதை தராத கள், கச்சா பட்டு, மண் பாண்டம், களிமண் விளக்கு, பூஜை பொருள்களும் உள்ளன.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT