Published : 27 Aug 2017 02:04 PM
Last Updated : 27 Aug 2017 02:04 PM

டெல்லி-வாரணாசி இடையே விமானம்: விஸ்தாரா திட்டம்

புதுடெல்லி வாரணாசி இடையே தினசரி விமான போக்குவரத்தை தொடங்க விஸ்தாரா திட்டமிட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்த விமான போக்குவரத்தை நிறுவனம் நிறுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என விஸ்தாரா தெரிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஆரம்ப கால சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழி பயணத்துக்கு ரூ.1,500 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 19 நகரங்களில் வாரத்துக்கு 600 விமானங்களை விஸ்தாரா இயக்குகிறது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சர்வதேச நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x