Published : 01 Aug 2017 09:48 AM
Last Updated : 01 Aug 2017 09:48 AM

இவரைத் தெரியுமா?- லாரன்ஸ் டோஸி

சர்வதேச அளவில் சுற்றுலாத்துறையின் முன்னணி நிறுவனமான ஏர்பின்பி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2008-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை பிளாக்ஸ்டோன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2004-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை போபா மெரில் லின்ச் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் நிதி இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1999-ம் ஆண்டிலிருந்து 2001-ம் ஆண்டு வரை குளோபல் மார்க்கெட்ஸ் மற்றும் முதலீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

போபா மெரில் லின்ச் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x