Published : 14 Aug 2017 10:23 AM
Last Updated : 14 Aug 2017 10:23 AM

சோலார் பேனல்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கருத்து

சோலார் பேனல்களுக்கு வரியைக் குறைக்கும் திட்டமில்லை என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சோலார் பேனல்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. சோலார் பேனல்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: சோலார் பேனல் தயாரிப்பாளர் களுக்கு ஏதேனும் இது தொடர்பாக பிரச்சினை தொடந்து இருக்குமாயின் மத்திய அரசு எதையும் செய்ய இயலாது.

மேலும் சோலார் பேனல் களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வருவதன் மூலம் இந்த துறையில் மேலும் வெளிப்படைத்தன்மை உருவாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. மேற்கூரை சூரிய மின் உற்பத்தி மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 40,000 மெகாவாட் மின் உற்பத்தி செய் வதற்கு இலக்கு நிர்ண யித்துள்ளோம்.

2020-ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சோலார் பேனல்கள் உற்பத்தியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தவிர, சோலார் பம்ப், சோலார் தெருவிளக்கு மற்றும் எரிசக்தி திறன் கொண்ட அமைப்புகள் போன்றவற்றுக்கும் இந்தத் துறையில் அதிக வாய்ப்பு இருக்கின்றன. இந்தியா வேலை தேடுவதிலிருந்து மாறி, வேலைகளை உருவாக்கும் நாடாக உருவெடுத்து வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x