Published : 02 Aug 2017 10:03 AM
Last Updated : 02 Aug 2017 10:03 AM
சண்டிகரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான ஹர்ஷித் சர்மா கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1.44 கோடி சம்பளமாகவும் அறிவித்துள்ளது. சண்டிகர் நகரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாணவர் பயின்று வருகிறார்.
சிறு வயது முதலே இந்த மாணவர் வடிவமைப்பில் கொண்டிருந்த ஈடுபாட்டால் கூகுள் இவரை பணிக்கு அமர்த்தியுள்ளது. இவரது 10 வயது முதல் வடிவமைப்பில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் இவரது பெற்றோர் கிராபிக் டிசைனர் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துள்ளனர். இவரது ஆர்வத்தினால் தற்போது உலகின் மிகப் பெரிய நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவில் பணியாற்ற உள்ளார்.
பள்ளி காலத்திலேயே பாலிவுட் திரைப்பட போஸ்டர்களை வடிவமைத்துள்ளார். மேலும் கூகுள் நிறுவனம் நடத்திய வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்றதால் இந்த வாய்ப்பை கூகுள் அளித்துள்ளது.
முதலில் கூகுள் நிறுவனத்தில் பயிற்சியாளராக ஓர் ஆண்டு பணியாற்றுவார். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 4 லட்சம் ஊதியமாக அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்ததும் மாதம் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்வார். நான் சாரசரி மாணவனாக இருந்தாலும் என் கனவு நிறைவேற உள்ளது என்றும் ஹர்ஷித் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT