Published : 17 Aug 2017 10:06 AM
Last Updated : 17 Aug 2017 10:06 AM
கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சாயப் பட்டறை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து சில ரசாயனங்களை இறக்குமதி செய்கின்றன.
இந்த ரசாயன இறக்குமதி காரணமாக உள்ளூரில் இத்தகைய ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன பொருள்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி ஒரு டன்னுக்கு 120.14 டாலர் கூடுதலாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரசாயன இறக்குமதி தொடர்பாக விசாரணை நடத்துமாறு குஜராத் ஆல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ், டெமாக் குளோரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் புகார் அளித்திருந்தன.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விட இறக்குமதி செய்யும் பொருள் விலை குறைவாக இருந்தால், அத்தகைய பொருள் மீது கூடுதலாக பொருள் குவிப்பு வரி விதிக்க சட்டத்தில் இடமுண்டு. உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காக்க அனைத்து நாடுகளுக்கும் இதுபோன்ற வசதி விதிமுறையில் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கும் உள்நாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கும் சந்தையில் உரிய போட்டி சூழல் உருவாக்குவதற்காக இதுபோன்ற பொருள் குவிப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT