Published : 11 Aug 2017 03:58 PM
Last Updated : 11 Aug 2017 03:58 PM
ரூபாய் மதிப்பு உயர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சவால்கள் ஆகியவற்றினால் 6.75-7.5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவது கடினம் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு நடு ஆண்டில் வெளியிடுவது இதுவே முதல் முறை.
ஜிடிபி, தொழிற்துறை உற்பத்திக் குறியீடு, கடன், முதலீடு, திறன் பயனாக்கம், ஆகியவற்றின் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும் போது 2016-17- முதல் காலாண்டில் சரிவு ஏற்பட்டுள்ளது, இதே நிலை 3-ம் காலாண்டுக்குப் பிறகும் நீடித்தது.
பிப்ரவரி மாதம் வெளியிட்ட முதல் தொகுதி ஆய்வறிக்கையில் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.75-7.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஏற்றுமதிகள், பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பணப் புழக்கம் அதிகரித்ததையடுத்து இவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பரிமாற்றத்தில் ரூபாய் மதிப்பு நிலவரம், விவசாயக் கடன் தள்ளுபடி, மின்சாரம், தொலைத் தொடர்பு, வேளாண் அழுத்தங்கள், ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தலால் ஏற்படும் மாற்ற நிலைகள் ஆகீய புதிய காரணிகளின் ஆதிக்கத்தினால் 6.75-7.5% பொருளாதார வளர்ச்சி கடினமாகியுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் ரூபாய் மதிப்பு 1.5% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டது பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT