Published : 23 Aug 2017 05:03 PM
Last Updated : 23 Aug 2017 05:03 PM

விரைவில் புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம்

புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நான்காவது ரூபாய் நோட்டு இதுவாகும்.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 200 ரூபாய் நோட்டு வெளியாக உள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ஆர்பிஐ சட்டம் 1934 - பிரிவு 24 வழங்கியுள்ள அதிகாரத்தின்படியும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவின் பரிந்துரை காரணமாகவும், மத்திய அரசு புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரூபாய் நோட்டின் வடிவம் குறித்தோ, எப்பொழுது நோட்டு வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x