Published : 07 Jul 2017 11:26 AM
Last Updated : 07 Jul 2017 11:26 AM

இது முழுமையான ஜிஎஸ்டி அல்ல: சிதம்பரம்

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முழுமையானது அல்ல. ஜிஎஸ்டி என்பதே கேலிக்கூத்து என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி என்பது ஒரு நாடு ஒரு வரி என கூறமுடியாது. ஏழுக்கும் மேற்பட்ட வரி விகிதங்கள் தற்போது உள்ளன. அதிகபட்ச வரியை 18 சதவீதமாக குறைப்பதற்கு காங்கிரஸ் நெருக்குதல் கொடுக்கும். தவிர பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.தற்போது அமல்படுத்தி இருக்கும் சட்டம் முழுமையானது அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பரிந்துரைத்தது இதுவல்ல. தற்போது 0.25, 3,5,12,18,28 மற்றும் 40 சதவீதம் என வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.இதுதவிர மாநில அரசுகளுக்கும் வரி விதிக்கும் அதிகாரம் இருக்கிறது.

தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராகவில்லை என்பதையும் இரு மாதங்களுக்கு தள்ளிப்போடவேண்டும் என்று வலியுறுத்தியதையும் இந்த அரசு கேட்கவில்லை.ஜிஎஸ்டியை உருவாக்கியதும் காங்கிரஸ்தான். உண்மையான ஜிஎஸ்டியை கொண்டு வரப்போவதும் நாங்கள்தான். இதற்கான நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம் என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x