Published : 25 Jul 2017 10:49 AM
Last Updated : 25 Jul 2017 10:49 AM
இந்திய உருக்கு ஆணையத்தை (செயில்) லாபகரமான நிறுவனமாக மாற்ற ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மத்திய உருக்கு அமைச்சக அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் இடம்பெறுவர். நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமாகவும் பொதுத்துறை நிறுவனமாகவும் விளங்கும் செயில் லாபமீட்டுவதற்கான ஆலோசனைகளை இக்குழு அளிக்கும்.
இத்தகவலை நேற்று மக்களவையில் எழுத்துமூலமான பதிலில் உருக்கு அமைச்சர் விஷ்ணு தேவ் குறிப்பிட்டார். செயில் நிறுவனத்தை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சக உயர் அதிகாரிகள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் நுட்பக் குழு வல்லுநர்கள் ஆகியோர் இடம் பெறுவர். இவர்கள் செயில் மற்றும் ராஷ்ட்ரீய இஸ்பட் நிகாம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்) நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவர் என்று அவர் கூறினார்.
இந்த நிறுவனங்களின் உற்பத்தியை,விற்பனை அதிகரிப்பு மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கான வழிகளை இக்குழு அளிக்கும் என்றார். 2016-17-ம் ஆண்டில் செயில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 12.43 லட்சம் டன்னாக உள்ளது.நிறுவனத்தின் 2017 மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ. 771 கோடியாக உள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT