Published : 11 Jul 2017 10:56 AM
Last Updated : 11 Jul 2017 10:56 AM

விஜய் மல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜுலை 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜுலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் பெற்றும் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் பலமுறை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏகே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் யாரும் ஆஜராகததால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். அதன்பிறகு சொலிசிட்டர் ஜெனரலை அழைத்து விளக்கம் கேட்டனர். மத்திய அரசு இந்த வழக்கை தவிர்க்கப் பார்க்கிறதா? ஏன் மத்திய அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என நீதிபதிகள் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேள்வி கேட்டனர். மேலும் வழக்கை வருகிற ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருகிற ஜூலை 14-ம் தேதி தண்டனை விவரம் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x