Published : 15 Nov 2014 10:30 AM
Last Updated : 15 Nov 2014 10:30 AM
டிவிஎஸ் நிறுவனம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் இடையே அவர்களின் லாரியை பழுது பார்ப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநாட்டில் கையெழுத்தானது. இது குறித்து டிவிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீநிவாச ராவகன் கூறியதாவது: லாரியை பல ஊர்களுக்கு ஓட்டிச் செல்லுமிடத்தில் பழுது ஏற்பட்டால் செலவு செய்ய ஓட்டுநரை நம்பி பணம் தரமுடியவில்லை.
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் சார்பில் ஹைபர் மார்ட் என்ற அட்டையை லாரி உரிமையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இது குறித்து லாரி உரிமையாளர்களிடம் பேசி தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து பழுது பார்க்கும் மையங்களிலும் லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை பழுது பார்த்துக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT