Published : 30 Jul 2017 11:05 AM
Last Updated : 30 Jul 2017 11:05 AM

மருத்துவமனைகளை கட்ட ஐடிசி திட்டம்

ஐடிசி நிறுவனம் மருத்துவமனைகளை கட்ட முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை களுக்கு முன் உதாரணமாக பன்னோக்கு மருத்துவமனைகளை (மல்டி ஸ்பெஷாலிட்டி) கட்ட முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஒய்.சி. தேவேஷ்வர் தெரிவித்துள்ளார்.

எந்த இடத்தில், எவ்வளவு முதலீட்டில், எவ்வளவு காலத்தில் கட்டி முடிப்பது என்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

நோயாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் வகையில் மருத்துவமனைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாக்டர்கள் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு ஏற்ப ஊக்கத் தொகை அளிக்கும் வழக்கம் முற்றிலும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைக்காக புதிய தலைமைச் செயல் அதிகாரியை நிறுவனம் தேடி வருகிறது. அதன் பிறகு எவ்வளவு முதலீட்டில் எந்த இடத்தில் என்பது இறுதி செய்யப்படும். சிகரெட் தயாரிப்பிலிருந்து உணவுப் பொருள் தயாரிப்பில் கவனம் செலுத்திவரும் ஐடிசி நிறுவனம், அடுத்த கட்டமாக பன்னோக்கு மருத்துவமனைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x