Published : 27 Jan 2014 10:48 AM
Last Updated : 27 Jan 2014 10:48 AM

அதிக வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்: அரசு எச்சரிக்கை

அதிக வட்டி தருவதாகக் கூறி திரட்டும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊகத்தின் அடிப்படையில் அதிக வட்டி வழங்குவதாகக் கூறுவதும், உண்மை நிலவரமும் ஒருபோதும் ஒன்றாக இணையாது. இதனால் அதிக வட்டி தருவதாகக் கூறும் நிதித் திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. மல்டி லெவல் மார்கெடிங், பிரமிட் போன்ற நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசடி முதலீட்டுத் திட்டங்கள் பொன்ஸி திட்டங்கள் என்றழைக்கப் படுகின்றன.

மேற்கு வங்கத்தில் சாரதா சீட்டு நிறுவனம் பொதுமக்களிடம் திரட்டி ஏமாற்றிய பெருமளவு மோசடி போன்ற அதிக தொகை கொண்ட பெருமளவு பொதுமக்களை ஏமாற்றிய நிதி மோசடிகளே வெளிச்சத்துக்கு வருகின்றன. இவ்விதம் முதலீடு திரட்டும் நிறுவனங்களில் சில பதிவு செய்யப்படாதவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x