Published : 13 Jun 2016 09:53 AM
Last Updated : 13 Jun 2016 09:53 AM
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான டிபிஎஸ் கூறியுள்ளது.
மத்திய அரசின் செலவுகள் உயர்ந்து வருவது, மக்களின் நுகர்வு அதிகரிப்பது ஆகிய காரணங்களால் ஜிடிபி வளர்ச்சி இருக்கும். அதே சமயத்தில் ஜிடிபி எண்கள் குறித்த சந்தேகங்களும் உள்ளன. கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் எதிர் பார்த்ததை விட வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் சில துறைகளில் மந்த நிலை இருப்பது காணமுடிகிறது.
நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி இருந் தாலும், அரசு முதலீடு மற்றும் நுகர்வு காரணமாக இருக்கும் வளர்ச்சி யாகும். இது சரிசமமான வளர்ச்சி கிடையாது. தனியார் துறை முதலீடு கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை யிலான காலாண்டில் மேம்படும். இவ்வாறு டிபிஎஸ் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT