Published : 11 Feb 2014 11:54 AM
Last Updated : 11 Feb 2014 11:54 AM

கே.என்.சிவசுப்ரமணியன் - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் முக்கியமான ஃபண்ட் மேனேஜர். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி.

$ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஃபிராங்க்ளின் நிறுவனத்தில் இருக்கிறார்.

$ இவர் கையாண்ட ஃபண்ட்கள் கடந்த ஐந்து வருடத்தில் 21 சதவீத (ஆண்டுக்கு) வருமானம் கொடுத்தது. இதே பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் 16 சதவீதம் (ஆண்டுக்கு) வருமானம் மட்டுமே கொடுத்தது.

$ ஜெய்ப்பூர் மண்டல பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர், கோல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிர்வாகப் படிப்பு படித்தவர்.

$ 50 வயதான இவர், தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இனி தன் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்.

$ சந்தை உச்சத்தில் இருந்த 2005-06 -ம் ஆண்டுதான் கடினமான காலகட்டமாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார். மேலும் பங்குச் சந்தை சார்ந்த வேலைகள் எதுவும் செய்யப்போவதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x