Published : 29 Apr 2017 10:38 AM
Last Updated : 29 Apr 2017 10:38 AM
இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்துக்கும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனத் துக்கும் இடையேயான இழப்பீடு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு டாடா சன்ஸ் மற்றும் ஜப்பானை சேர்ந்த என்டிடி டொகோமோ ஆகிய நிறுவனங்கள் இணைந்தன. டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் 26.5 சதவீத பங்குகளை என்டிடி டொகோமோ ரூ.12,740 கோடிக்கு வாங்கியது.
ஆனால் இணைப்பின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டொகோமோ வெளியேற நினைத்தால் குறைந்தபட்சம் 50 சதவீத தொகை திரும்ப கிடைக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2009-ம் ஆண்டில் நடந்தது.
கருத்து வேறுபாடு இருந்ததால், 2014-ம் ஆண்டு என்டிடி டொகோமோ நிறுவனம் வெளியேற முடிவு செய்தது. ஆனால் ஒப்பந்தத்தின்படி டொகோமோ வசம் இருந்த பங்குகளை வாங்குவதற்கு ஏற்ற முதலீட்டாளர்களை டாடா சன்ஸ் நிறுவனத்தால் கொண்டுவர முடியவில்லை.
அதனால் டொகோமோ நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் டொகோமோ நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. டாடா சன்ஸ், டொகோமோ நிறுவனத்துக்கு 117 கோடி டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படு கின்றன. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தை மதிப்பு அடிப்படை யிலேயே தொகையை பெறமுடியும். முன் தேதியிட்ட விலையின் படி முதலீட்டை திரும்ப பெற முடியாது என விதியை மாற்றியது.
இந்த விஷயத்தில் இரு நிறுவனங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி விதிமுறையால் இழப்பீடு வழங்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் டாடா சன்ஸ் இழப்பீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT