Last Updated : 14 Jun, 2017 10:03 AM

 

Published : 14 Jun 2017 10:03 AM
Last Updated : 14 Jun 2017 10:03 AM

மோசடி வழக்கு 2 தொழிலதிபர்கள் கைது

மோசடி வழக்கு தொடர்பாக பொதுத் துறை வங்கியின் முன்னாள் உயர் அதிகாரி மற்றும் 2 தொழிலதிபர் களை சிபிஐ நேற்று கைது செய்தது.

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் அபிஜித் குழுமத்தின் நிறுவனர்கள் மனோஜ் ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரையும், இரு வங்கிகளுக்கு ரூ. 290 கோடி நஷ்டம் ஏற்படக் காரணமாயிருந்ததன் காரணமாக சிபிஐ கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் துணைப் பொது மேலாளரும் கைது செய்யப்பட்டார்.

அபிஜித் குழுமம் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20 வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் இக்குழுமம் கடன் பெற்றிருக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 2014-ம் ஆண்டிலிருந்து இக்குழுமம் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ. 11,000 கோடி என சிபிஐ தெரிவித்துள்ளது.

கனரா வங்கி மற்றும் விஜயா வங்கிக்கு ரூ. 290 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படக் காரணமாயிருந்த வங்கியின் முன்னாள் துணைப் பொது மேலாளர் டி.எல். பாய் கைது செய்யப்பட்டார்.

இந்நிறுவனத்தின் மீது 2015-ம் ஆண்டே மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களது செயலால் கனரா வங்கிக்கு ரூ. 218 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ. 71.92 கோடியும் இழப்பு ஏற்பட் டுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x