மூன்றாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7%

மூன்றாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7%
Updated on
1 min read

மூன்றாம் காலாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டதால் வளர்ச்சி குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்ட சூழ்நிலையில் 7 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது.

பெரும்பாலான வல்லுநர்கள் 6.4 சதவீத வளர்ச்சி என கணித் திருந்த நிலையில் 7 சதவீத வளர்ச்சியடைந்திருக்கிறது. அதே போல நடப்பு நிதி ஆண்டு மொத்த வளர்ச்சியிலும் மாற்றம் இல்லை. ஏற்கெனவே கணிக்கப்பட்ட 7.1 சதவீத வளர்ச்சி எட்ட முடியும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி யும், இரண்டாம் காலாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியும் எட்டப்பட்டது.

பணமதிப்பு நீக்கத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை வளர்ச்சி விகிதம் காண்பிப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

அதே சமயம், முறையற்ற வேலைகளில் பெரும்பாலான வர்கள் பணிபுரிவதால் ஜிடிபி தகவல்கள் நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை பிரதி பலிக்காது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோச கர் அர்விந்த் சுப்ரமணியன் கடந்த மாதம் கூறினார். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் இந்த வளர்ச்சி ஆச்சர்யம் அளிப்பதாக தெரிவித்தனர்.

நிதி பற்றாக்குறை இலக்கு

நடப்பு நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு முழுமையாக எட்டப்பட்டது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஜனவரி வரை) நிதிப் பற்றாக்குறை ரூ.5.64 லட்சம் கோடியாக அல்லது 105.7 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிதிப்பற்றாக்குறை 95.8 சதவீதமாக இருந்தது.

முதல் பத்து மாதங்களில் நிகர வரி வருமானம் 8.16 லட்சம் கோடியாக இருக்கிறது. பொதுவாக நிதி ஆண்டின் கடைசி இரு மாதங்களில் வரி வருமானம் அதிகமாக இருக்கும். அதனால் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக (ஜிடிபியில்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த நிதி ஆண்டில் (2017-18) நிதிப்பற்றாக்குறையை 3.2 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in