Published : 03 Feb 2014 10:37 AM
Last Updated : 03 Feb 2014 10:37 AM

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

சென்செக்ஸ் 90.36 புள்ளிகள் குறைந்து 20,423.49 புள்ளிகளாகவும், நிப்டி 26.10 புள்ளிகள் குறைந்து 6,063.40 புள்ளிகளாகவும் இருந்தன.

சில்லறை முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிதி பங்குகளை விற்கும் போக்கு அதிகமாக இருந்ததாலும், ஆசிய பங்குச்சந்தையின் வீழ்ச்சி எதிரொலியாகவும் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் மதிப்பு உயர்வு

வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 62.59 ஆக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x