காசோலை மோசடி வழக்கு: கிங்பிஷர் முன்னாள் தலைமை நிதி அதிகாரிக்கு 18 மாதம் சிறை

காசோலை மோசடி வழக்கு: கிங்பிஷர் முன்னாள் தலைமை நிதி அதிகாரிக்கு 18 மாதம் சிறை
Updated on
1 min read

கிங்பிஷர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஏ.ரகுநாதனுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். ஜிஎம்ஆர் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு எதிரான இரு காசோலை மோசடி வழக்குகளுக்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கிருஷ்ணா ராவ் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ.20,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விஜய் மல்லையா மற்றும் ரகுநாதன் ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் நேரில் ஆஜராகாததால் தீர்ப்பு விவரம் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ரகுநாதன் நேரில் ஆஜரானதை தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. விஜய் மல்லையா நேரில் ஆஜராகாததை அடுத்து அவருக்கான தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரு காசோலைகள் கிங்பிஷர் நிறுவனம் ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு வழங்கியது. அந்த காசோலையில் பணமில்லாமல் திரும்பியதை அடுத்து ஜிஎம்ஆர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இவர்கள் இருவர்கள் மீதும் ஜாமீனில் வரமுடியாத பிடியாணையை நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்தது.

இது குறித்து ரகுநாதனின் வழக்கறிஞர் கூறும்போது, அவர் மீது(ரகுநாதன்) பல நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனால் அவரால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை. அவர் மீதான பிடியாணை நீக்குவதற்கு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம் என்று கூறினார்.

ஜிஎம்ஆர் வழக்கறிஞர் கூறும்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தீர்ப்பை நெருங்கும் தருணத்தில் இருக்கிறது என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in