Published : 13 Jul 2016 10:03 AM
Last Updated : 13 Jul 2016 10:03 AM
குவிஸ் கார்ப் நிறுவனத்தின் பங்கு நேற்று பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தொடங்கியது. 317 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பங்கு நேற்று ஒரே 59 சதவீதம் உயர்ந்தது. 499 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு வர்த்தகத்தின் இடையே 60 சதவீதம் உயர்ந்து ரூ.508 வரை சென்றது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 59 சதவீதம் உயர்ந்து 503.10 ரூபாயில் முடிவடைந்தது.
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுப்பங்கு வெளியிட்டது. 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த பங்குக்கு ஆதரவு இருந்தது. 145 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை ஆனது.
ரூ.310-317 விலை பட்டையில் இந்த ஐபிஒ வெளியிடப்பட்டது. இதன் மூலம் 400 கோடி ரூபாய் இந்த நிறுவனம் திரட்டியது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT