Published : 04 Feb 2017 10:48 AM
Last Updated : 04 Feb 2017 10:48 AM

மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி: மல்லையா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அரசுகளிடமும் நான் மாட்டிக்கொண்டேன். கால்பந்து விளையாட்டில் அடிபடும் பந்துபோல இவர்களிடம் நான் அடிவாங்குகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக நடுவர்கள் யாரும் இல்லை. தவிர இந்த களத்தை ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என விஜய் மல்லையா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறியிருப்ப தாவது: மத்திய புலனாய்வுத்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. உயர்ரக (சிபிஐ) போலிஸ் அதிகாரிகளுக்கு தொழில் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் என்ன தெரியும்.? குற்றத்துக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லா சில இமெயில்களை மட்டும் ஊடகங்களுக்கு ஏன் சிபிஐ வெளியிடுகிறது என கேள்வி எழுப்பியவர், மாறன் விஷயத்தில் சிபிஐ பல குற்றச்சாட்டுகளை கூறியது. இறுதியில் நடந்தது என்ன? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x