Published : 02 Apr 2017 10:02 AM
Last Updated : 02 Apr 2017 10:02 AM
எஸ்பிஐயுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை இணைந்துள்ளதால் உலகின் 50 பெரிய வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ இடம்பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.41 லட்சம் கோடியாக இருக்கிறது.
நேற்று இந்த இணைப்பு நடைபெற்றது. தற்போது 2.77 லட்சம் பணியாளர்கள், 50 கோடி வாடிக்கையாளர்கள், 25,000-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 58,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் எஸ்பிஐ வசம் இருக்கிறது. மேலும் இந்திய வங்கி சந்தையில் எஸ்பிஐ பங்கு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இந்த இணைப்புக்கு பிறகு 36 நாடுகளில் இருக்கும் 190 கிளை களை எஸ்பிஐ வாடிக்கையாளர் கள் பயன்படுத்த முடியும் என எஸ்பிஐ தன்னுடைய இணைய தளத்தில் தெரிவித்திருக்கிறது. துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி யின் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களை வரவேற்பதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித் திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT