Published : 24 Mar 2014 11:51 AM
Last Updated : 24 Mar 2014 11:51 AM

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வர்த்தகம் துவங்கி சில மணி நேரத்தில், முதல் முறையாக சென்செக்ஸ் 22,046.58 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 6,580.90 என்ற உச்சத்தை தொட்டது.

முன்னதாக, இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 124 புள்ளிகள் உயர்ந்து 21,879.50 புள்ளிகளாகவும், நிப்டி 33.95 புள்ளிகள் உயர்ந்து 6,528.85 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்நிலையில், சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகளின் உந்துதலே காரணம் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்செக்ஸ் புள்ளிகளின் உயர்வுக்கு ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய முக்கிய நிறுவனங்கள் பெறும் பங்காற்றியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x