Published : 18 Nov 2014 09:38 AM
Last Updated : 18 Nov 2014 09:38 AM

8400 புள்ளிகளுக்கு மேலே முடிந்தது நிப்டி: 52 வார உச்சத்தை தொட்டது எஸ்பிஐ

இந்தியாவின் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தில் முடிந்தன. சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து 28177 புள்ளியிலும், நிப்டி 41 புள்ளிகள் 8430 புள்ளியிலும் முடிவடைந்தன. 8400 புள்ளிகளுக்கு மேலே நிப்டி முடிவது இப்போதுதான்.

மேலும், வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 28205 புள்ளியையும், நிப்டி 8438 என்ற அதிகபட்ச புள்ளியையும் தொட்டன.

மேலும் மிட்கேப் குறியீடு 0.58 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.07 சதவீதமும் உயர்ந்து முடிந்தது. மெட்டல் மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகளைத் தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. கட்டுமானத்துறை குறியீடு 1.85% உயர்ந்தது. மின்துறை குறியீடு 1.54 சதவீதமும், ஆட்டோ 1.43% பொதுத்துறை குறியீடு 1.41 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.பி.ஐ.,டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், என்.டி.பி.சி., மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன. மாறாக, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, கோல் இந்தியா, எஸ்.எஸ்.எல்.டி மற்றும் எம் அண்ட் எம் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்ததால் அந்த பங்கு 5.48 சதவீதம் உயர்ந்து 2,940 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையான 2,951 ரூபாயைத் தொட்டது.

யென் வீழ்ச்சி

ஜப்பானின் கரன்சியான யென் மதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான யென் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு யென்னுக்கு 115.69 யென் தரவேண்டியிருந்தது. இது மேலும் சரிந்து 117 யென் தர வேண்டிய நிலைக்கு சரிந்தது.

ஜப்பானின் பங்குச் சந்தை நிக்கி 3 சதவீதம் அதாவது 225 புள்ளிகள் சரிந்து 16,973.80 என்ற நிலையை எட்டியது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஒரே நாளில் இந்த அளவுக்கு குறியீட்டெண் சரிந்தது இப்போதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x