Published : 22 Mar 2014 02:18 PM
Last Updated : 22 Mar 2014 02:18 PM

மீரா சன்யால் - இவரைத் தெரியுமா?

$ முன்னாள் வங்கியாளரான இவர், தற்போது தெற்கு மும்பை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

$ டந்த 2009-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவிடம் தோற்றுப்போனார்.

$ ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் தலைவராக இருந்திருக்கிறார். மேலும் வங்கித்துறையில் 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர். Grindlays Bank, Lazards உள்ளிட்ட வங்கிகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

$ கொச்சியில் பிறந்த இவர் மும்பை, டெல்லி, கொல்கத்தா, பாரிஸ், பாஸ்டன் ஆகிய இடங்களில் கல்வி பயின்றவர். சி.ஏ. முடித்த இவர், INSEAD- ல் எம்.பி.ஏ. படித்தவர்.

$ ஃபிக்கி, சி.ஐ.ஐ. உள்ளிட்ட பல கூட்டமைப்புகளில் பல கொள்கை முடிவுகளை எடுத்தவர்.

$ இந்தியா முழுக்க இருக்கும் முக்கியமான கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்லூரி மாணவர்களிடம் உரையாடி இருக்கிறார். மேலும் 450க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x