Published : 12 Jun 2017 09:11 AM
Last Updated : 12 Jun 2017 09:11 AM

இந்திய சந்தையில் ரூ.11,445 கோடி அந்நிய முதலீடு

கடந்த ஏழு வர்த்தக தினங்களில் இந்தியாவுக்கு ரூ.11,445 கோடி நிகர அந்நிய முதலீடு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டது மற்றும் பருவமழை குறித்த சாதகமான கணிப்பு ஆகிய காரணங்களால் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜூன் 1 முதல் 9 வரையிலான காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.289 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய கடன் சந்தைக்கு ரூ.11,734 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x