Published : 15 Jun 2016 09:55 AM
Last Updated : 15 Jun 2016 09:55 AM

இவரைத் தெரியுமா?- கே சனத் குமார்

கொல்கத்தாவை மைய மாக கொண்டு செயல்படும் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வரு கிறார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஜென்ரல் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2012-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை பிரிஸ்டிஜ் அஷூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப் பில் இருந்தவர்.

ஜிஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகள் இல்லாத நிர்வாக இயக்குநராக இருந்தவர்.

இன்ஷூரன்ஸ் துறையில் 36 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவர்.

கேரளாவில் உள்ள மஹாராஜாஸ் கல்லூரியில் உயிரியல் பிரிவில் இளநிலை பட்டமும் கொச்சின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x