Published : 18 Mar 2014 10:08 AM
Last Updated : 18 Mar 2014 10:08 AM

உக்ரைன் பிரச்சினையால் தங்கம் விலை உயர்வு

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இதனால் ஆறு மாத உச்சபட்ச விலையில் தங்கம் வர்த்தகமாகி வருகிறது. அரசியல் காரணங் களால் இந்த வருடம் மட்டும் தங்கத்தின் விலை 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்த உயர்வுக்கு அரசியல் காரணங்கள் மட்டுமல்லாமல், பொருளாதார மந்த நிலையும் கூட ஒரு காரணமாகும். திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,391 டாலர்களை தொட்டது. இது கடந்த வருட செப்டம்பர் மாத விலை நிலவரமாகும். இதே சமயத்தில் ஆசிய சந்தைகள் ஒரு மாத குறைந்தபட்ச புள்ளியில் வர்த்தகமாகி வருகிறன்றன.

ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர்கள் தொடர்ந்து தங்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் ஐந்தாவது வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x