Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

லாரன்ஸ் எலிசன் - இவரைத் தெரியுமா?

$ சாஃப்ட்வேர் துறையின் முக்கியமான நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பையும் முழுமையாக முடிக்கவில்லை.

$ 1977-ம் ஆண்டில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் லேப் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன்பு எட்டு வருடம் சின்ன சின்னதாய் பல வேலைகளை செய்திருக்கிறார். இடையே கம்ப்யூட்டரும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

$ சி.ஐ.ஏ.வுக்கு இவர்கள் செய்துகொடுத்த ஒரு புராஜக்டின் பெயர்தான் ஆரக்கிள். பிற்காலத்தில் இந்த புராஜக்ட் பெயரையே அந்த நிறுவனத்துக்கு வைத்துவிட்டனர்.

$ 1990-ம் ஆண்டு கிட்டத்தட்ட திவால் என்ற நிலைமைக்கு நிறுவனம் வந்துவிட்டது. அதன்பிறகு நிர்வாகத்தில் தொழில்முறை நிர்வாகிகளைக் கொண்டு வந்ததில் இரண்டு வருடங்களில் நிறுவனம் மீண்டு வந்துவிட்டது.

$ இவருக்கு சாகச விளையாட்டுகளிலும் விருப்பம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x