Published : 14 Jan 2014 11:34 AM
Last Updated : 14 Jan 2014 11:34 AM

21000 புள்ளிகளுக்கு மேலே சென்செக்ஸ்

கடந்த சில நாட்களாக சரிவடைந்து வந்த பங்குச்சந்தைகள் திங்கட்கிழமை உயர்ந்தன. வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 410 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 21134 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 6272 புள்ளிகளில் முடிவடைந்தது. நவம்பர் 25-ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் பங்குச்சந்தை இந்த அளவுக்கு உயர்வது இதுதான் முதல் முறையாகும்.

புதிய எரிவாயு கொள்கை, ரூபாய் மதிப்பு உயர்வு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் மற்றும் ஜனவரி இறுதியில் நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது என்கிற சந்தையின் எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து சந்தையின் ஏற்றது காரணமாக இருந்தன.

கடந்த மூன்று வாரங்களாக `கன்சாலிடேட்’ ஆகி வந்த இந்திய சந்தைகள் திங்கட்கிழமை உயர்ந்ததற்கு வங்கி, டெக்னாலஜி, ஆயில் மற்றும் எரிவாயு துறை பங்குகளின் ஏற்றம்தான் காரணம். முக்கிய சந்தைகள் நன்றாக உயர்ந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறிய அளவு ஏற்றத்தை மட்டுமே சந்தித்தன. திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். டெக் மஹிந்திரா, பாரத் போர்ஜ் ஆகிய சில பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசாக்கள் வரை உயர்ந்து ஒரு டாலர் 61.52 ரூபாயாக முடிவடைந்தது. இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல் ஆசியாவின் முக்கிய சந்தைகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடனே வர்த்தகத்தை துவங்கின.

ஹெல்த்கெர் துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் ஏற்றத்திலே முடிவடைந்தன. குறிப்பாக ஐ.டி. துறை குறியீடு 3 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கித்துறைகள் 2 சதவீதத்துக்கு மேலாக உயர்ந்தன. புதிய எரிவாயு கொள்கையினால் ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி. ஆகிய பங்குகள் 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x