Published : 14 Nov 2013 01:07 PM
Last Updated : 14 Nov 2013 01:07 PM

அக்டோபர் மாதத்துக்கான பணவீக்கம் 7 சதவீதமாக உயர்வு

அக்டோபர் மாதத்துக்கான நாட்டின் மொத்த பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இது 6.46 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் இந்தளவு உயர்ந்துள்ளது முதல் முறையாகும். கடைசியாக, 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணவீக்கம் 7.32 சதவீதமாக இருந்தது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர பட்டியலில்: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பணவீக்கம் இந்தளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு முறை நடைபெற்ற நிதி கொள்கை சீராய்வு கூட்டத்தில், ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x