Published : 24 Jan 2017 10:24 AM
Last Updated : 24 Jan 2017 10:24 AM

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு: மத்திய அரசு யோசனை

எலெக்ட்ரானிக் பரிவர்த் தனை முறையை ஒழுங்குபடுத்து வதற்கு தனியான கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு யோசித்து வருகிறது.

மத்திய வங்கியின் செயல்பாடு களில் இருந்து தனியாக பேமெண்ட் அமைப்பை பிரித்து மத்திய அரசு கட்டுப்பாடுகளை வேண்டும் என்று ரத்தன் வாட்டாள் கமிட்டி பரிந்துரை செய்தது. ரிசர்வ் வங்கி என்பது வங்கிகளுக்கான கட்டுப்பாட்டு அமைப்பு. அதன் கொள்கைகள் வங்கிகளுக்கு சாதகமாக இருக்கும். பேமெண்ட் தொழிலில் உள்ள நிறுவனங்க ளின் நன்மைகளை நினைத்து விதிமுறைகளையோ கொள்கைக ளையோ ரிசர்வ் வங்கி உருவாக்க வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விதிமுறைகள் வங்கி களுக்கு மையப்படுத்தியே உரு வாக்கப்பட்டு வருகின்றன. பேமெண்ட் அமைப்புகளுக்கு தனியான கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டு வரும் பொழுது பரி வர்த்தனைகளை எளிமையாக்கு வது மற்றும் பரிவர்த்தனை கட்டணம் போன்றவை குறித்து விதிகளை கொண்டு வர முடி யும் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. வங்கிகள் இல்லாமல் பரிவர்த்தனைகள் நடைபெறாது. பேமெண்ட் கட்டுப்பாடுகள் என் பதும் வங்கி கட்டுப்பாடுகள் என்பதும் வெவ் வேறானது. ஆனால் ரிசர்வ் வங்கி இதை ஒப்புக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ரத்தன் வாட் டாள் கமிட்டி தனது அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி யிடம் சமர்பித்தது. இந்த கமிட்டி புதிய பேமெண்ட் கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்து பரிந் துரைத்துள்ளது. இல்லையெனில் தற்போது ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பேமெண்ட் முறைகளை மேற்பார்வையிடும் பிபிஎஸ்எஸ் என்ற அமைப்பின் சுதந்திரத்தை அதிகப்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x