Last Updated : 06 Jun, 2016 11:05 AM

 

Published : 06 Jun 2016 11:05 AM
Last Updated : 06 Jun 2016 11:05 AM

இந்தியா- கத்தார் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

இந்தியா தற்போது முதலீட்டாளர் களுக்கு சிறந்த வாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கத்தார் தொழிலதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுப் பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இரு நாடுகளிடையே மொத்தம் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் முக்கியமானது நிதி புல னாய்வு. இந்த ஒப்பந்தம் மூலம் அந்நியச் செலாவணி மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனையாவதைத் தடுக்க முடியும். கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்த மும் இதில் முக்கியமானதாகும். திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முன்னதாக கத்தார் தொழிலதிபர்களுடனான வட்ட மேசை சந்திப்பில் பேசிய மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உங்களை தனிப்பட்ட முறையில் அழைப்பதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன் என்றார். வேளாண் பதனீடு, ரயில்வே, சூரிய மின்சக்தி உள்ளிட்ட துறைகளில் வளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் வளமான வாய்ப்புள்ளது என்பதை அங்கீகரிக்கிறீர்கள். இருப்பினும் முதலீடு செய்யத் தயங்குகிறீர்கள். முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறினால் அதை நீக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் 80 கோடி இளைஞர்கள் உள்ளது மிகப் பெரிய பலமாகும். கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது, உற்பத்தித் துறையை முடுக்கி விடுவது ஆகியன தம் முன் உள்ள முக்கிய முன்னுரிமைப் பணிகள் என்று மோடி குறிப்பிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ, நகர்ப்புற கழிவு மேலாண்மை ஆகியன மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு மேம்பட கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி மிக முக்கிய பங்காற்றி வரு வதாகக் கூறினார். இரு நாடுகளி டையிலான வர்த்தகம் 1,000 கோடி டாலராகும். இது மேலும் அதிக ரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

ஐந்து நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ஆப்கனிலிருந்து கத்தார் வந்து தொழிலதிபர்களை சந்தித்தார். பின்னர் ஸ்விட்சர்லாந்து சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். பயணத்தின் இறுதியில் மெக்சிகோ சென்று அங்கிருந்து தாயகம் திரும்புகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x