Published : 26 Jan 2017 10:42 AM
Last Updated : 26 Jan 2017 10:42 AM
அடுத்த 25 வருடங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உலகின் முதல் `டிரில்லியனராக’ இருப்பார் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது 86 வயதில் அதாவது அடுத்த 25 வருடங்களில் உலகின் முதல் `டிரில்லியனராக’ இருப்பார் என ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2009-ம் ஆண்டிலிருந்து பில்கேட்ஸின் சொத்துமதிப்பு வருடத்திற்கு 11 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அவர் உலகின் முதல் `டிரில்லியனராக’ வருவார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய போது பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 5,000 கோடி டாலர். 2016-ம் ஆண்டு நிலவரப்படி அவரின் சொத்து மதிப்பு 7,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனத்திற்கு மிகப் பெரிய தொகையை கொடுத்த போதிலும் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் பில்கேட்ஸ் உட்பட உலகின் 8 பெரும் கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள தொகையானது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளதாக ஆக்ஸ்பாம் சமீபத்தில் புள்ளி விவர அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT