Published : 29 Jan 2014 11:19 AM
Last Updated : 29 Jan 2014 11:19 AM

பாஸ்கர் பட் - இவரைத் தெரியுமா?

$ 2002-ம் ஆண்டில் இருந்து டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர். சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கும், ஐஐஎம். ஆமாதாபாதில் நிர்வாக படிப்பும் படித்தவர்.

$ 1983-ம் ஆண்டு கோத்ரெஜ் நிறுவனத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை துவங்கிய இவர் அங்கு ஐந்தாண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு டாடா குழுமத்தில் சேர்ந்தார். 20 வருடங்களுக்கும் மேலாக டாடா குழுமத்தில் இருக்கிறார்.

$ பெங்களூரு நகர பேருந்துகளில் இவரைப் பார்க்க முடியும். பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்புவார்.

$ 2002-ம் ஆண்டு இவர் பொறுப்புக்கு வரும் போது நிறுவனம் மிகப்பெரிய சிக்கலில் இருந்தது. முதலீட்டாளர்களிடம் பேசி, நிதி திரட்டி நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்சென்றார். இப்போது அதிக பிராண்ட்கள், அதிக கிளைகள், கடனில்லாத நிறுவனம் என டைட்டன் நிறுவனம் இருப்பதற்கு இவரது பங்களிப்பும் ஓரு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x