Published : 09 Nov 2014 01:14 PM
Last Updated : 09 Nov 2014 01:14 PM
ரிசர்வ் வங்கியின் பரிந்து ரையை ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி ஆறு மெட்ரோ நகரங்களில் இருக்கும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கியின் ஏடிஎம்-யை ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால் 20 ரூபாய் கட்டணம் விதிக்க முடிவு செய்திருக்கிறது.
இந்த உத்தரவு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை முதலில் அறிமுகப்படுத்திய தனியார் வங்கி ஹெச்.டி.எப்.சி. ஆகும் அதன்பிறகு ஆக்ஸிஸ் வங்கி அமல்படுத்தி இருக்கிறது.
பணப்பரிவர்த்தனை இல்லா மல், பாஸ்வேர்ட் மாற்றுவது, மினி ஸ்டேட்மெண்ட் எடுப்பது ஆகியவற்றுக்கு ரூ.8.50 ஹெச்.டி.எப்.சி வங்கி வசூலிக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி இதற்கு ரூ.9.50 வசூலிக்கிறது. ஆனால் இது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களுக்கு மட்டுமே. நடப்பு கணக்கு வாடிக்கையாளர் களுக்கு ஹெ.சி.எப்.சி எந்த கட்ட ணமும் விதிக்கவில்லை.
அதேபோல ஆக்ஸிஸ் வங்கியின் சில குறிப்பிட்ட (ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே இருப்பு வைத்திருக்கும் ) வாடிக் கையாளர்களுக்கு 10 இலவச பரிவர்த்தனையை அறிவித்தி ருக்கிறது. மற்ற ஏடிஎம்களை ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தவும் அனுமதித் திருக்கிறது.
ஏடிஎம் பயன்படுத்த கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தாலும், இதனை அமல்படுத்துவது அந்தந்த வங்கிகளை பொறுத்தது என்று தெரிவித்திருந்தது. ஆனால் பல வங்கிகள் இதுகுறித்து இன்னும் முறையாக அறிவிப்பை வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT