Published : 25 Feb 2014 10:24 AM
Last Updated : 25 Feb 2014 10:24 AM

பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு ஏற்றம்

காலை வர்த்தக தொடக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை, இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் இருந்தன.

வர்த்தக தொடக்கத்தில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 96.90 புள்ளிகள் உயர்ந்து 20,908.34 புள்ளிகளாகவும், நிப்டி 24.60 புள்ளிகள் உயர்ந்து 6,200 புள்ளிகளாகவும் இருந்தன.

ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்தில் இருந்தது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்குச்சந்தை தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 61.95 என்ற நிலையில் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x