Published : 09 Aug 2016 10:46 AM
Last Updated : 09 Aug 2016 10:46 AM

இவரை தெரியுமா?- ஷைலேந்தர் குமார்

ஆரக்கிள் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். அக்டோபர் 2014 லிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார். இதற்கு முன்பு நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவராக இருந்தவர்.

இந்தியாவில் ஆரக்கிள் மென்பொருளை பரவலாக கொண்டுசெல்லவும், நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர் சேவைக்கும் பொறுப்பாளராவார்.

கணக்கியல் வல்லுநர். மென்பொருள், கிளவுட், மென்பொருள் நிர்வாகம் போன்றவற்றில் நிபுணர்.

ஆரக்கிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் கணக்கியல் துறையின் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியவர்.

பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டம் வைத்துள்ளார்.

க்யூஎஸ்எப்டி மென்பொருள் மற்றும் பிஇஏ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் ஐபிஎம் நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் மேலாண்மை கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x