Published : 18 Jun 2017 11:17 AM
Last Updated : 18 Jun 2017 11:17 AM

ஒரு மாதத்தில் ரூபே கிரெடிட் கார்டு அறிமுகம்: என்பிசிஐ தலைவர் பாலச்சந்திரன் தகவல்

இன்னும் ஒரு மாதத்தில் ரூபே கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்ய என்பிசிஐ திட்டமிட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் கிரெடிட் கார்டு தயாராக இருக்கின்றன என்று என்பிசிஐ தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அறிமுகம் செய்வதற்கு கிரெடிட் கார்டுகள் தயாராக உள்ளன. 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற் றும் கூட்டுறவு வங்கிகளுடன் தொடர் பில் இருக்கிறோம். இந்த வங்கி களுடன் சோதனை அடிப்படையில் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கிடைக்கும் கருத்துகளை வைத்து கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.

கிளாஸிக், பிளாட்டினம் மற்றும் செலக்ட் என்னும் மூன்று வகை கார்டுகள் அறிமுகம் செய்யப்படும். பல வங்கிகள் இதுவரை கிரெடிட் கார்டுகளை வழங்கவில்லை என்ப தால் அதிக கார்டுகள் வழங்க முடியும் என்னும் நம்பிக்கை இருக் கிறது. அதே சமயத்தில் டெபிட் கார்ட் வழங்குவது என்பது வங்கி களுக்கு எளிதான விஷயம். ஆனால் கிரெடிட் கார்டில் வாடிக்கையாள ரின் தகுதி மற்றும் தேவைக்கு ஏற்ப வழங்கவேண்டி இருக்கும். அதனால்தான் இந்தியாவில் அதிக டெபிட் கார்டுகளும், குறைவான கிரெடிட் கார்டுகளும் உள்ளன. இந்தியாவில் 77 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. ஆனால் 2.5 கோடி கிரெடிட் கார்டுகள் மட்டுமே உள்ளன.

மற்ற நிறுவனங்களின் கார்டு களில் இருக்கும் சிறப்பம்சங்கள் எங்களின் கார்டுகளிலும் இருக் கின்றன. பிரீமியம் ரக கிரெடிட் கார்டில் 10 லட்ச ரூபாய் காப்பீட்டு வசதி இருக்கிறது. சர்வதேச அளவில் ரூபே கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

இப்போது ரூபே கார்டுகள் முழுமையான கார்டு ஆக இருக்கிறது. ஏடிஎம், இ-காமர்ஸ் தளங்கள், சர்வதேச அங்கீகாரம், பிஓஎஸ் மெஷின்கள் என அனைத்திலும் ரூபே கார்டுகளை பயன்படுத்த முடியும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x