Last Updated : 05 Jun, 2016 01:40 PM

 

Published : 05 Jun 2016 01:40 PM
Last Updated : 05 Jun 2016 01:40 PM

சீன கார் தயாரிப்பு நிறுவனம் மீது ஜாகுவார் லேண்ட் ரோவர் வழக்கு

சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனமான ஜியாங்லிங் மோட்டார் நிறுவனம் மீது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜாகுவார் நிறுவனத்தின் எவோக் மாடல் காரின் வடிவமைப்பை அப்படியே ஜியாங்லிங் நிறுவனம் பயன்படுத்தி கார் தயாரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டுதான் சீன சந்தைக்கென ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் எவோக் மாடல் காரை அறிமுகப்படுத்தியது. ஆனால் ஜியாங்லிங் நிறுவனம் தற்போது லேண்ட்விண்ட் எக்ஸ் 7 எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அது அப்படியே எவோக் மாடல் காரின் வடிவமைப்பில் உள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இது குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிறுவனம் டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இதேபோல ஜியாங்லிங் நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. பொதுவாக ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் வடிவமைப்பு சார்ந்து சீன நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவுமே சட்ட ரீதியான வழக்குகளில் வெற்றி பெறுவது கிடையாது. மேலும் வழக்கு தொடர்வதால் தங்களின் பிராண்ட் பாதிக்கப்படும் என பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கருதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x