Published : 09 Oct 2013 12:04 PM
Last Updated : 09 Oct 2013 12:04 PM

அருந்ததி பட்டாச்சார்யா - இவரைத் தெரியுமா?

#1977-ம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார்.

#கடந்த 36 வருடங்களாக எஸ்.பி.ஐ.யில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார். மேலும், நியூயார்க்கில் இருக்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையிலும் பணிபுரிந்துள்ளார்.

#206 வருட எஸ்.பி.ஐ. வரலாற்றில், முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பட்டாச்சார்யா. இதற்கு முன்பு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.

#எஸ்.பி.ஐ.யின் தலைவராக இன்னும் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார்.

#துணை வங்கிகளை இணைப்பது, வாராக்கடனை குறைப்பது உள்ளிட்ட பல சவாலான பணிகள் இவருக்காக காத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x