Published : 01 Jan 2014 12:27 PM
Last Updated : 01 Jan 2014 12:27 PM

அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

நான்கு அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 502 கோடியாகும். மஹ்ளே ஹோல்டிங்ஸ் இந்தியா, ஹெச்.பி.ஓ இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.

அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) கடந்த 9-ம் தேதி அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முதலீடுகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மஹ்ளே ஹோல்டிங்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரம்பை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. முதலீட்டு அளவு ரூ. 500 கோடியாகும்.

ஹெச்பிஓ இந்தியா நிறுவனம் செய்தி அல்லாத பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்ய அனுமதி கோரியிருந்தது. இவை தவிர ஏர் வொர்க்ஸ் இந்தியா நிறுவனம், ஹாங்காங்கைச் சேர்ந்த மால்கா அமிட் குளோபல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x