Published : 22 Oct 2013 02:28 PM
Last Updated : 22 Oct 2013 02:28 PM

ஆனந்த் மஹிந்த்ரா - இவரைத் தெரியுமா?

#ஹார்வேர்ட் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவர். 1981-ம் ஆண்டு மஹிந்த்ரா நிறுவனத்தில் நிதித்துறை இயக்குனரின் உதவியாளராகச் சேர்ந்தார்.

#1991-ல் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். 1997-ம் ஆண்டு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2012-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

#2013-ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதினை இவருக்கு வழங்கி இருக்கிறது ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை. தொழிலதிபர்களுகாக மேலும் சில விருதுகளையும் இவர் வாங்கி இருக்கிறார்.

#கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் மதிப்பை 10 மடங்குக்கு மேல் உயர்த்தி இருக்கிறார்.

#ட்விட்டர் சமூகவலைதளத்தில் மட்டும் 9.5 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். சமூக வலைதளத்தை உலகளவில் அதிகம் பயன்படுத்தும் சி.இ.ஒ.க்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

#"எப்போதெல்லாம் என் பிஸினஸ் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறேனோ அப்போதெல்லாம், போதுமான அளவு நான் ரிஸ்க் எடுக்க வில்லை" என்று உணர்ந்தேன் என்று சமீபத்தில் இவர் கொடுத்த பிரபலமான ஸ்டேட்மென்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x